districts

சென்னை முக்கிய செய்திகள்

விமான நிலையத்தில் வாகன  நிறுத்த கட்டணம் திடீர் உயர்வு

சென்னை, டிச.4- சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்த கட்டணம் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமை முதல் மீண்டும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 முதல் ரூ.50 வரை அதிகரித்து இருக்கிறது. கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 80 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 85 ஆகவும் கார்க ளுக்கு அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கு ரூ. 525 ஆக இருந்தது ரூ.550 ஆகவும் உயர்ந்து உள்ளது. டெம்போ வேன்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.315 ஆக இருந்தது, தற்போது ரூ.330 ஆகவும் 24 மணி நேரத்திற்கு கட்டணம் ரூ.1,050 ஆக இருந்தது ரூ.1,100-ஆக அதிகரித்து உள்ளது. பேருந்து, லாரிகளுக்கான குறைந்த பட்ச கட்டணம் ரூ.630 ஆக இருந்தது, தற்போது ரூ.660 ஆகவும் 24 மணி நேரத்திற்கான கட்டணம் ரூ.2,100 ஆக இருந்தது ரூ.2,205 ஆகவும் உள்ளது.இருசக்கர வாக னங்களும் இந்த கட்டண உயர்வுக்கு தப்பவில்லை. 30 நிமி டங்களிலிருந்து ஒரு மணி நேரம் வரை கட்டண உயர்வு இல்லா மல், பழைய கட்டணமான ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படு கிறது. ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை ஏற்கெனவே ரூ.30 ஆக இருந்த கட்டணம் ரூ.35 ஆகவும், 24 மணி நேரத்திற்கான பழைய கட்டணம் ரூ.95 தற்போது ரூ.100 ஆகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

புயல் மழை நிவாரண தொகையை  புதுச்சேரி அரசு உயர்த்த வேண்டும்  விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

புதுச்சேரி, டிச.4-  பெஞ்சல் புயல் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு புதுச்சேரி முதலமைச்சர் அறிவித்த நிவாரணம் போதுமானது அல்ல என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.  இது குறித்து சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் எஸ். ராமமூர்த்தி, செயலாளர் வே.சங்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரியில் கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு புயல் மற்றும் மழை வெள்ளத்தால்  விவசாயிகள்,  குடிசை வாழ் மக்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திரு வண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் 59 செ.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது,  இதனால் தென்பெண்ணை ஆற்றின்  சாத்தனூர் அணையில்  இருந்து திறந்து விடப்பட்ட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கன அடி மற்றும் வீடூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது.  அறுவடைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் நெல், உளுந்து, காராமணி, மல்லாட்டை, கரும்பு, மரவள்ளி, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  அதாவது வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்ற னர்.  விளைவித்த பயிர்கள் முற்றாக அழகும் நிலையில் உள்ளது.  சராசரி யாக புதுச்சேரி மாநில முழுவதும் 8,000 ஏக்கர் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பாகூர், நெட்டப்பாக்கம், கரையம்புத்தூர், ஏம்பலம், திருக்கனூர், மடுகரை என புதுச்சேரி முழுவதும்  அகில இந்திய விவசாய சங்கத்தின் தலைவர்கள் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டும், விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்து வருகிறோம்.  பெஞ்சல் புயலால் அதிக கன மழையால் பாதிக்கப்படும் என்று 20 நாட்களுக்கு முன்பாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், புதுச்சேரி அரசு போர்க்கால அடிப்படையில் அனைத்து வடிகால் வாய்க்கால் நீர் நிலைகள் என அனைத்தையும் முழுமையாக தூர்வாரவில்லை. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாக இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை எங்கள் அகில இந்திய விவசாய சங்கத்தின் சார்பில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். ‘புதுச்சேரி முதலமைச்சர் பொத்தாம் பொதுவாக பாதிப்புகளை உணராமல் கணக்கெடுக்காமல் உடனடியாக விவசாய பாதிப்புகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு போதுமானதல்ல. எனவே பாதிப்புகளை, புதுச்சேரி  அரசு நிர்வாகமும் பாரபட்சமின்றி உடனடியாக கணக்கெடுத்து நெல், உளுந்து, காராமணி, காய்கறிகள், தானிய பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும்.மேலும் உயிரிழந்த கால்நடைகளுக்கு ரூ.75 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.50 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும். கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க  வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விவசாயி மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு

வேலூர், டிச.4 - வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஒனாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு குறித்து காவல்துறையினரும் வனத்துறை யினரும் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.  இவர் தனது கிராமத்தின் அருகே காப்பு காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார் இதில் அவரது  தொடைப்  பகுதியில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள்  மீட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.  அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடம் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மாடு மேய்த்த இடம் காப்புக்காடு என்பதால் வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக துப்பாக்கிச் சூடு நடைபெற்றதா என்ற கோணத்திலும் காவல் மற்றும் வனத்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மழை பாதிப்பு: நிவாரணம் கோரும்   பட்டு கைத்தறி நெசவாளர்கள் 

திருவண்ணாமலை, டிச.4-  ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் மழை யால் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, பட்டு கைத்தறி  நெசவு தொழி லாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சைதாப்பேட்டை, முள்ளிப்பட்டு, முனுகப்பட்டு, திருமணி, தேவிகாபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் பட்டு ரகங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தறி நெசவு கால் குழிகளில் தண்ணீர் தேங்கி யுள்ளது. எனவே பட்டு கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஒரு மாதத்திற்கு நெசவுத் தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பட்டு கைத்தறி நெசவு தொழில் பாதிப்பு குறித்து விசாரணை நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திருவண்ணாமலை பட்டு கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். வீரபத்திரன் அறிக்கை ஒன்றில் தெரி வித்திருக்கிறார்.

காலமானார்

 சென்னை, டிச. 4- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆர்.துரைசாமியின் மகன் ககாரின் (40) உடல் நல குறைவால் கடந்த திங்களன்று (டிச. 2) காலமானார். அம்பத்தூர் அருகே அயனம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைப்பொதுச் செய லாளர் மு.வீரபாண்டியன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, பகுதிச் செயலாளர் ஆர்.விஜய குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.கண்ணன், டி.எம்.மூர்த்தி (ஏஐடியுசி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கோபி, நிர்வாகிகள் சி.சுந்தரராஜ், சு.பால்சாமி, ஏ.ராயப்பன், கே.சீனிவாசன், சி.ஆனந்த், வேதநாயகம், நவநீதன், எஸ்.ராஜா, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி, தாமோதரன் (மதிமுக), சிதம்பரம் (காங்கிரஸ்), ஏ.எஸ்.குமார் (கம்யூனிஸ்ட் கட்சி) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் புதன்கிழமை (டிச. 4) காலை அம்பத்தூரில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது.

காலமானார்

ராணிப்பேட்டை, டிச. 4 – வாழைப்பந்தல் கிராமத்தைச்சேர்ந்த காமாட்சி அம்மாள் காலமானார். அவருக்கு வயது 80.இவர் சிபிஎம் வட்டச்செயலாளர் எஸ்.கிட்டுவின் தாயார் ஆவார்.  வாழைப்பந்தல் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த காமாட்சி அம்மாள் உடலுக்கு சிபிஎம் மாவட்டச் செய லாளர் பி. ரகுபதி, மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன், மாற்றுத்திறனாளி சங்க மாநில துணைத் தலைவர் ரமேஷ் பாபு, ராணிப்பேட்டை மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி. ராதாகிருஷ்ணன், ம. கோவலன், ஹரி. கார்த்திக், விவசாய சங்க மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, திருவண்ணாமலை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகலாதன்,  மூத்த உறுப்பினர்கள் அப்பாசாமி, கண்ணன் உள்ளிட்ட வட்டார குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.  பின்னர், புதனன்று (டிச. 4) காலை வாழைப்பந்தல் இடுகாட்டில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.