districts

img

மாணவர்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்: எழுத்தாளர்கள்

புதுச்சேரி, செப்.7 - வரலாற்றை இன்றைய மாணவர்கள் அவ சியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று  எழுத்தாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டையொட்டி சனிக்கிழமையன்று (செப்.7) கடற்கரை சாலையில் புதுச்சேரி மாணவர் கிளை சார்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. ‘சிலைகள் சொல்லும் கதை’ என்ற தலைப்பில் வரலாற்றை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கு.பச்சையம்மாள், உ. சுகன்யா, அ. மதுமிதா ஆகியோர் தலைமை தாங்கினர். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் நிகழ்வை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாது காப்பு இயக்கத்தின் செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு குறித்த அறிமுக உரை யாற்றினார். அம்பேத்கர் குறித்து  பாவலர் சண்முக சுந்தரம், வ.உ. சிதம்பரனார் பற்றி நில வழகன், மகாகவி பாரதி குறித்து கவிஞர் மு. பாலசுப்ரமணியன், பாவேந்தர் பாரதி தாசன் பற்றி பாவலர் தி. கோவிந்தராசு, ஆயி மண்டபம் குறித்து பேராசிரியர் மு. ராஜா ஆகியோர் பேசினர். ஜூலை 30 தியாகிகள் நினைவுச்சின்னம் குறித்து  சிஐடியு புதுச்சேரி செயலாளர் ஜி .சீனிவாசன், சிங்காரவேலர் பற்றி அ.செல்வம், புதுச்சேரி விடுதலை போராட்ட வீரர்  தோழர். வ. சுப்பையா குறித்து மேனாள் சட்டமன்ற உறுப்பினர்  கலைநாதன். கலை இலக்கிய பேராசான் ப. ஜீவா னந்தம் குறித்து முனைவர் நா. இளங்கோ, தந்தை பெரியார் குறித்து திராவிட கழகப் பொறுப்பாளர் சிவ .வீரமணி, பெருந்தலை வர் காமராஜர் குறித்து முஎகச செயலாளர் மணி.கலியமூர்த்தி ஆகியோர் பேசினர். சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் நாடகவியலாளர் ஞா. கோபி , நூற்றாண்டுக்  கவிஞர் தமிழ் ஒளி குறித்து கவிஞர் உமா அமலோற்பவ மேரி ஆகியோர்  பேசினர். புதுச்சேரி அருங்காட்சியகத்தில் மாணவர் கிளை பொறுப்பாளர் அறிவன், அருங்காட்சி யகம் குறித்து உரையாற்றினார். இந்நிகழ்வில் பேசிய எழுத்தாளர்கள், வரலாறுகளை திரித்து பேசி எழுதி வருகிறார்கள். அதை முறியடிக்கவே உண்மையான வரலாறுகளை மாணவர்கள் கற்க வேண்டும். மாணவர்களிடம் உண்மை வரலாற்றை கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் உள்ளது என்றனர்.