தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.15 அன்று ஒருநாள் வேலை நிறுத்தமும், பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தமும் ஜாக்டோ ஜியோ நடத்த உள்ளது. இதற்கான சென்னை மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு சனிக்கிழமையன்று (பிப்.10) கேரளா சமாஜம் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர்கள் ம.அந்தோணிசாமி, சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அ.மாயவன், காந்திராஜன், உயர்மட்டக்குழு உறுப்பினர் விஜயகுமரன், மாவட்ட அமைப்பாளர் முத்துக்குமாரவேல் மற்றும் சத்யநாதன், கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.