புதுச்சேரி, ஜன. 17- பொதுவழியை மறித்து சுவர் எழுப்பும் முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையீட்டு தடுத்து நிறுத்தியது புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட சுதந்திர பொன்விழா நகரின் பின்புறம் மொட்டை தோப்பு பகுதி உள்ளது. அந்த பகுதியில் புதுச்சேரி குடிசைமாற்று வாரியத்திற்கு சொந்த மான அடுக்குமாடி குடியிருப்பில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பல ஆண்டுகாலமாக சுதந்திர பொன்விழா நகரின் சாலையை பொதுவழியாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஒருசிலரின் தூண்டுதலின் பேரில் மொட்டைதோப்பு பகுதி ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் பொது வழியை தடுத்து மதில் சுவர் எழுப்புவதற்கு அந்த தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்கு மார் முயற்சி மேற்கொண்டு வருவதாக அப்குதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. சிபிஎம் எதிர்ப்பு பல ஆண்டு காலமாக தாழ்த்தப்பட்ட பிற்படுத் தப்பட்ட மக்களின் பயன்பாட்டில் உள்ள பொது வழியை தடுத்து சுவர் எழுப்புவதை உடனே கைவிட வலிறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பேரணியாக சென்று புதுச்சேரி தலைமை செயலாளர் அஸ்வின் குமாரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை செயலாளர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளிடம் உறுதியளித்தார். பூமிபூசை இந்நிலையில், மீண்டும் மொட்டைதோப்பு பகுதியில் தடுப்புசுவர் எழுப்புவதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள திங்களன்று (ஜன. 17) பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் வருவதை அறிந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அங்கு 50க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், உழவர்கரை நகரச் செயலாளர் ராம்ஜி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், கொளஞ்சியப்பன், குப்புசாமி ஆகியோர் பொதுப்பாதையில் எப்படி மதில் சுவர் எழுப்ப முடியும் என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக தலைமை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினர். மேலும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும் இந்த பிரச்சனையை கொண்டு சென்றனர். தடுப்பு வேலி அகற்றம்! பிறகு சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட துணைஆட்சியர் கந்தசாமி, இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். பின்னர், தடுப்பு சுவர் அமைப்பதற்கு தடை விதித்தார். மேலும் பொது வழியை மறித்து அமைக்கப்பட்டிருந்த வேலிகளை யும் அகற்ற உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டன. பின்னர் சுவர் எழுப்பும் பணியும் நிறுத்தப்பட்டது.