districts

img

வண்டல் மண் எடுக்கும் பணி துவக்கம்

 கடலூர், ஜூலை 8 - கடலூர் மாவட்டத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் நீர்நிலைகளில் இருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட பயன்பாட்டிற்கு இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்கும் பணியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை யில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதனை அடுத்து கடலூர்  ஆட்சியர் அலு வலகத்தில் மாவட்ட ஆட்சியர்  அருண் தம்பு ராஜ் அதற்கான ஆணையை விவசாயிகளிடம் வழங்கி னார். கடலூர் மாவட்டத் தில் 1,518 நீர்நிலைகளிலி ருந்து மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் விவசாய நிலங்களை மேம்படுத்துதல், வீட்டு  உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப் பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் விவ சாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்ப வர்கள் கட்டணமின்றி வண்டல் மண், களிமண் எடுப்பதற்கு ஆணை வழங்கும் விழா நடை பெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை  மேயர் தாமரைச்செல்வன், கூடுதல் ஆட்சியர் சரண்யா, கனிமவளத்துறை உதவி இயக்குநர் ரமேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.