சிதம்பரம், ஜன. 6- சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு சான்று மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி தாளாளர் வீனஸ் குமார் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் ரூபியால் ராணி தலைமை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, துணை முதல்வர் அறிவழகன் நிர்வாக அலுவலர் ரூபி கிரேட் போனீங்களா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஓட்டப்பந்தயம், தட்டு மற்றும் குண்டு எறிதல், தொடர் ஓட்டம், கால்பந்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 75க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்று மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் பேசிய பள்ளியின் தாளாளர் வீனஸ் குமார், “வரும் கல்வி யாண்டில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு கட்டணத்தில் 20 விழுக்காடும், மாநில அளவிலான போட்டி களில் முதலிடம் பிடிக்கும் மாணவர்க ளுக்கு முழு கட்டண சலுகை அளிக்கப் படும்”என்றார். இந்த நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசி ரியர்கள் பிரபாகரன் அருண்பாண்டியன் உமா எப்சி மேரி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.