districts

சிஎம்டிக்கு சிறப்பு அலுவலர்கள்

சென்னை,ஜூன் 11- சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போன்று, கோவை, மதுரை, திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் பெருநகர வளர்ச்சி குழுமங்கள் அமைப்பதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஐஏஎஸ்  அதிகாரிக்கு நிகரான சிறப்பு அலுவலர்களை கொண்ட பணியிடங்களை உரு வாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு இந்த 4 மாநகராட்சிகளுக்கும் ஆரம்ப கட்டத்தில் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் ஆணையப் பகுதியை வரையறுத்தல், பணியாளர்களை நியமித்தல் மற்றும் ஆட்சேர்ப்பு, திட்டங்களை தயாரித்தல் போன்ற பல ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.