districts

சென்னை முக்கிய செய்திகள்

தீபாவளி: கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் நின்று செல்ல சிறப்பு ஏற்பாடு

செங்கல்பட்டு, நவ. 9- தீபாவளி கொண்டாடு வதற்கு சொந்த ஊர் செல்லும்  பயணிகளுக்கு தமிழ்நாடு  அரசு சொகுசு பேருந்து கள், தனியார் பேருந்துகள் நின்று செல்ல கிளாம் பாக்கம் பேருந்து நிலை யத்திலிருந்து சிறப்பு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கான பயணி கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம், இவ்வாறு செல்லும் பயணிகளுக்காக தமிழ்நாடு அரசு சொகுசு பேருந்துகள் முன் பதிவு செய்த பயணி கள் செல்ல ஏதுவாக  வண்ட லூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. வியாழன்  முதலே பயணிகள் தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர். பயணிகள் வசதிக்காக இந்த பேருந்து நிலையத்தில் காவல்துறை  பாதுகாப்பு, மருத்துவ முதலுதவி மையம், மொபைல் டாய் லெட் உள்ளிட்ட வசதிகளை  தற்காலிகமாக அரசின்  சார்பில் ஏற்படுத்தப்பட் டுள்ளது. மேலும் தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.72 லட்சம் மதிப்பிலான  பட்டுப்புடவைகள் திருட்டு

 சென்னை,நவ.9- சென்னை பெசன்ட் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கைத்தறி கண்காட்சியில் ரூ. 72 லட்சம் மதிப்பிலான 10 பட்டுப்புடவைகள் திருடப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்காட்சி  ஏற்பாட்டாளர்கள் கண்காணிப்பு கேமராக் களை போட்டு பார்த்தனர். அப்போது பெண் கள் சிலர் கூட்டமாக நின்றுகொண்டு துணி எடுப்பதுபோல நடித்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கேமரா  காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்தனர்.  இதில் கூட்டமாக நின்ற பெண்களில் 7 பேர்  விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை திருடியது தெரியவந்தது. 

காலமானார்
சென்னை, நவ. 9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஆயிரம் விளக்கு பகுதிகுழு உறுப்பின ரும், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவருமான டி.சுரேந் திரனின் தாயார் த.பாளையம் புதனன்று (நவ.8) காலமானார். அவருக்கு வயது 75. அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், பகுதி செயலாளர்கள் வெ.இரவீந்திர பாரதி (ஆயிரம் விளக்கு), இ.மூர்த்தி (தி.நகர்),  மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் நர்ஸ் தற்கொலை

செங்கல்பட்டு , நவ.8- நந்திவரம் கூடுவாஞ்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு  விழுப்புரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 20) நர்சாக வேலை பார்த்து வந்தார்.  இவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி  பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று உடன் தங்கி இருந்த 3 பெண் ஊழியர்கள் பணிக்கு சென்றனர். ராஜேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார்.இந்த நிலையில் ராஜேஸ்வரி அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து  கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளத்தில் 2 வாலிபர்கள் பிணம்

 சென்னை, நவ. 9– மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே ரயில் தண்டவாளத்தில் வியாழனன்று  காலை 2 வாலிபர்கள் பிண மாக கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி  மக்கள் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்  வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர்களில் ஒருவரது செல்போன்  எண்ணை வைத்து அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. மற்றொருவரின் உடல் முழுவதும் சிதைந்து கிடந்ததால் அவரை பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை. உடல்கள் கிடந்த இடம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல பாதை இல்லை. மேலும் இரண்டு பேரின் உடல்களும் தண்டவாளத்தின் இருபுறத்திலும் தனித்தனியாக கிடந்தது. எனவே அவர்கள் ஓடும் ரயிலில் இருந்து விழுந்ததில் இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ரயிலில் பயணம் செய்த போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி சிறப்பு வந்தே பாரத் ரயில்  

சென்னை, நவ.9- சென்னை எழும்பூர்- நெல்லை இடையே வெள்ளி,  சனிக்கிழமை  மற்றும் வருகிற  13, 14-ந் தேதியும் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப் படவுள்ளது. தீபாவளியை முன்னிட்டு  தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களின் முன்பதிவு நிறைவடைந்து அதிக அளவில் காத்திருப் போர் பட்டியலில் உள்ளனர். இதனால் சென்னை எழும் பூரில் இருந்து வியாழக் கிழமை கூடுதலாக ஒரு சிறப்பு வந்தே பாரத் ரயில்  இயக்கப்பட்டது. இந்த நிலை யில் மேலும் 4 நாட்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதே போல் தூத்துக் குடி சென்னை இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில் 4நாட்கள் இயக்கப்படும் என  தெற்கு ரயில்வே அறிவித் துள்ளது.

அமைச்சர் மா.சுப்ரமணியன்  அறிமுகப்படுத்திய தீபாவளி லேகியம்

சென்னை,நவ.9- தீபாவளி பண்டிகையின் போது இனிப்பு மற்றும் கார வகைகளை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் மூலப் பொருட்கள் இது தவிர  அதிகமாக சாப்பிடுவது போன்ற பிரச்சினைகளால் வயிற்று கோளாறுகள் உருவாகும். கடைகளில்  தீபாவளி லேகியம் விற்கப் படும் முதல்முறையாக தமிழ்நாடு  அரசு நிறுவன மான டேம் கால் இந்த  ஆண்டு தீபாவளி லேகி யத்தை தயாரித்துள்ளது.  இந்த லேகியத்தை ஆயுர்வேத தினத்தை ஒட்டி  வியாழனன்று அமைச்சர்  மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினார்.நமது பாரம்பரிய மருத்துவ முறை களால் இந்த பக்க விளைவுகளும் கொடுக்காத முறையில் தீபாவளி லேகியத்தை நிறுவனம் தயாரித்துள்ளது. பொதுமக்கள் இதை வாங்கி பயன்படுத்தலாம் தமிழகம் முழுவதும் டைம்  கால் விற்பனை கடைகளில்   கிடைக்கும் என்றார். நிகழ்ச் சியில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்சிங் பேடி  உள்ளிட்ட உயர் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

மனநலம் பாதித்த ஓடிசா இளைஞரை குணப்படுத்திய அரசு மருத்துவர்கள்

கிருஷ்ணகிரி,நவ.9 -  மனநலம் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரியில் சுற்றித்திரிந்த இளைஞர் மீட்கப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் பூவதி, மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் மனநல மருத்துவர்கள் பூங்கொடி, முனிவேல், சுவேதா, செவிலியர் குமார் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்தனர்.  80 நாட்கள் சிகிச்சை அளித்தும் சுயநினைவின்றி இருந்த இளைஞருக்கு, அடுத்த நாள் சுயநினைவு மெல்ல திரும்பியது. இதையடுத்து, ஆவணங்களை சரி பார்த்த காவல்துறையினர் ஒடிசாவுக்கு அனுப்பி வைத்தனர்.

திருவண்ணாமலையில்  நவ.19 கலைப்போட்டிகள்

திருவண்ணாமலை,நவ.9-  தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய ஐந்து பிரிவுகளில் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் 19.11.2023 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட அரசு இசைப்பள்ளி, கிரிவலப்பாதை, செங்கம் ரோடு, நேரு யுவகேந்திரா பின்புறம், ரமணாஸ்ரமம் அஞ்சல், திருவண்ணாமலை – 606 603. என்ற முகவரியில் நடக்கிறது. இப் போட்டியில் தனிநபராக  பங்கேற்க வேண்டும். குழுவாக பங்கு பெற அனுமதி இல்லை. குரலிசைப், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், தவில், மிருதங்கம், போன்ற கருவியிசை, பரதநாட்டிய போட்டியில் அதிகபட்சமாக 5 நிமிடங்கள் நிகழ்ச்சி மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுவார்கள். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.  ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஓவியத் தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை பங்கேற்பாளர்கள் கொண்டுவரவேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள்.

தனியார் ரசாயன ஆலையில் தொடரும் விபத்து விசாரணைக்கு உத்தரவிட சிபிஎம் கோரிக்கை

புதுச்சேரி,நவ.9- புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள சோலாரா ரசாயன தொழிற்சாலையில் தொடரும்  விபத்து குறித்து உரிய விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி காலாப்பட்டு பகுதி மாத்தூர் செல்லும் சாலையில் சோலாரா ஆக்டிவ் பார்மா (சாசன் கெமிக்கல்) ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெடி விபத்தில் 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காய மடைந்தனர். ஆலையில் இருந்து வெளி யேறிய ரசாயன புகை மூட்டத்தால் தொழி லாளர்களும் அந்த வழியாக சென்ற பொது மக்கள் அவதிப்பட்டனர்.  இந்த ஆலையில் தொடர்ச்சியாக இதுபோன்ற வெடி விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பொது மக்கள் மற்றும் தொழிலாளர் நலனில் அக்கறை காட்டுவதில்லை. தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையினர் தொடர் ஆய்வுகள் நடத்த வேண்டும். எனவே, இந்த தொழிற்சாலையில் பணி யாற்றும் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுப்புற மக்கள் பாதுகாப்பாக வாழ்வ தற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மேலும் காயமுற்ற தொழிலாளர்களுக்கு தரமான உயர் மருத்துவ சிகிச்சை குண மடையும் வரை நிறுவனம் அளிக்க வேண்டும்.  விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வ லர்கள், உள்ளூர் மக்கள் தலைமையில் குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அதுவரைக்கும் இந்த தொழிற்சாலை இயக்க புதுச்சேரி அரசு அனுமதிக்க கூடாது.  இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.