districts

ரயில்களில் கடத்தப்பட்ட 670 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை,மே 24-  

    கஞ்சா வேட்டை 4.0 திட்டத்தின் கீழ், சென்னை சென்டிரல், எழும்பூர், காட்பாடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  

    இந்த நிலையில், கடந்த ஜனவரி  1 ஆம் தேதி முதல் மே 21 ஆம் தேதி வரை சென்டிரல், எழும்பூர், சேலம், கோவை உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில் நடத்திய சோதனையில் 670 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  

    4 பெண்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வடமாநிலங்களிலிருந்து ஆந்திரா மாநிலம் விஜயவாடா மற்றும் ரேணிகுண்டா வழியாக தமிழகம் வரும் அனைத்து  ரயில்களிலும் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட இதர தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா என தனி படையினர் வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு ரயில்வே போலீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.