மோடி அரசு பணமதிப்பிழப்பு என்று, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் உங்கள் புழக்கத்தில் இருந்தால் அவை செல்லாது என்ற அறிவிப்பு குலை நடுங்க வைத்தது. 90 சதவிகிதம் பணப்புழக்கம் இருந்த நாட்டில், குறிப்பாக சிறு, குறுந்தொழில் நடத்துபவர்கள், உற்பத்திக்கு பொருள் வாங்குவதற்குகூட கடன் உதவி கிடைக்காமலும், சம்பள பட்டுவாடா செய்ய முடியாமலும் போனது. தினக்கூலி கூட கொடுக்க முடியாத சூழலை உருவாக்கி அரசு கொடுமை இழைத்தது. கோவை, திருப்பூர் பகுதியில் சீமா (SIMA), கொடிசியா (CODICIA), சிஸ்மா (SISMA) ஆகிய அமைப் புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும், சிறு, குறுந்தொழில்கள் முடங்கின.
மிகவும் ஆபத்தான சூழ்நிலை தற்போது தான் உருவாகிறது அதுதான் ‘பணம் மதிப்பிழப்பு 40 சதவிகிதம் உற்பத்தி குறைந்தது என்று TANSTIA அமைப்பு தொழில் முனை வோரின் கூட்டமைப்பு அறிவித்தது. 30 சதவிகிதம் அரசு வருவாய் கொடுத்த இத் தொழில்கள் ஆட்டம் காண ஆரம்பித்தது. 24.01.2017 தொழில் துறை அமைப்பான அசோசெம் அறிக்கையில், பணம் மதிப்பு நீக்கத்தால் சிறு குறுந்தொழில் துறை பெருமளவு பாதித்துள்ளது என்று அறிவித்தது. அடுத்ததாக சிறு மற்றும் குறுந்தொழிலுக்கு தலையில் இடி விழுந்தது போல் மோடி அரசு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) என்னும் வரி கொள்கையை அறிவித்தது: 01.07.2017 அன்று நாடு முழுவதும் ஒரே மாதிரி யான ஜிஎஸ்டி வரி (சரக்கு மற்றும் சேவை வரி) என்ற அரக்கனை அறிவித்து “புதிய இந்தியா பிறந்தது” என்று ஒன்றிய அரசு மார்தட்டிகொண்டது. ஆமாம் இது புதுவிதமான இந்தியா தான் உருவாகியது. ஆனால் இது சிறு, குறுந்தொழிலுக்கு அல்ல. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே வசதி செய்து கொடுத்தது. இந்த வரி கொள்கையானது எல்லோருக்கும் வசதியானது என்று பேசப்பட்டது, நடைமுறை சிக்கல் மட்டும்தான் என்று பத்திரிகைகளும், மின் மீடியாவும் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவாக பேசினார்கள்.
ஆனால் நடந்தது என்ன..?
ஒரே ஆண்டில் லட்சம் பேர் வேலை இழப்பு, ஐம்பதாயிரம் சிறு மற்றும் குறுந்தொழில்கள் மூடல், தமிழ்நாட்டிற்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு” கோவிட் - 19: 2020 –ஆரம்பத்தில் இருந்தே மிக பெரிய பாதிப்பை நாடு சந்திக்க வேண்டியதாயிற்று, உயிரிழப்பு மற்றும் வேலை இழப்பு, வருவாயற்ற வாழ்க்கை சந்திக்க வேண்டிய சூழல், ஊரடங்கு, அச்சத்துடன் வாழ்க்கை போராட்டம், சிறு, குறுந்தொழில்கள் வீட்டில் இருந்து வேலை செய்யமுடியாத தொழில்கள். அவர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் அதாவது வேலை செய்யும் தொழிலாளிக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை, வங்கிக்கும் வட்டி கட்டமுடியாத அவலமான நிலைமையும், விற்பனை செய்த இடத்தில் இருந்து (PAYMENT) பணமும் வராது, தேங்கியிருக்கும் உற்பத்தி செய்த பொருளை விற்பனை செய்யவும் முடியாது. வாடகைக் கூட கட்டமுடியாத நிலைமை, மின்சார தொடர்பை தொடர்ச்சியாக தொடர வைத்துக் கொள்ளக் கூட இயலாத நிலைமை. இவ்வளவு காரணிகளையும் சுமந்து, அழிவு பாதைக்கு தள்ளப்பட்ட சூழல்தான் தொழில் முனைவோர்களின் நிலை. இந்த காலக்கட்டத்தில், அதாவது 73 சத விகிதம் எந்த விதமான லாபமும் அடைய வில்லை. 59 சதவிகிதம் ஆட்கள் குறைக்கப்பட்ட னர். ஆட்களை வெளியேற்றுவது கோவிட் காலத்திற்கு முந்தைய காலத்தை விட அதிக மாக இருந்தது. சிறு குறு நடுத்த்தர தொழில்முனை வோரில் 82 சதவிகித்தினர் ஒன்றிய அரசும், மாநில அரசும் எங்கள் நலனை கண்டு கொள்ளவே இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். மூலப் பொருள்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு விலை உயர்ந்து கொண்டே செல்கிறது, அனைத்து சிறு, குறுந்தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்கள் அனைத்துமே பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களே உற்பத்தி செய்கிறது. அது அதன் பொருளின் விலையை நிர்ணயித்துக் கொள்கிறது, தற்போது கடந்த நான்கு மாதத்திற்குள் 100 சதவிகிதத்திற்கு மேல் வரை விலை உயர்ந்துள்ளது. இதன் காரண மாக மேற்கொண்ட சூழலிலிருந்து தப்பி, பிழைத்த சிறு, குறு நிறுவனங்கள் உற்பத்தி செய்ய முடியாமல் தத்தளிக்கின்றன. மறு வாழ்வின்றி நிலைமை மாறியுள்ளது. இந்த கொரோனா காலக்கட்டத்தில், அரசானது சிறு மற்றும் குறு தொழில்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் இருந்து தவறியதால் தொழில்கள் அழிந்து கொண்டு இருக்கிறது. இதனை உடனடியாக தடுக்க வேண்டியது, ஒன்றிய, மாநில அரசின் மிகப்பெரும் தலையாய கடமையாகும். தொழில் முனைவோருக்கான பல அரசு நிறுவனமும், வங்கிகளும் இருக்கின்றபோதும் ஏன் சிறு, குறுந்தொழிலை பாதுகாக்க முடிய வில்லை.? தொழில்முனைவோர்களுக்கு விழிப்பு ணர்வும், பயிற்சியும் ஏற்படுத்தவில்லை, இவைகள் அனைத்தும் திட்டங்களில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளதாலும், ஒட்டு மொத்த தொழில் முனைவோர்களின் 13 சத விகிதமே, வங்கி கடன் உதவி கிடைத்துள்ளது. மற்றவர்கள் சொந்த நிதியில்தான் தொழில் நடத்துக்கின்றார்கள். இதன் காரணமாகவும் நெருக்கடியான சூழலில் தாக்குபிடிக்க முடியாமல் தினறுகின்றனர். 1. உடனடி நிதி ஆதாரம், 2. ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டு வருதல், 3. மூலப் பொருள்களின் விலையை கட்டுபடுத்துதல் (RAW MATERIAL), 4. சந்தைபடுத்துதல், 5. மனிதவளம், 6. வடிவம் அமைத்தல் (Design and Development), 7. புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து சந்தை படுத்துதல், 8. தொழில் தொடங்க தகுந்த இடம் வழங்குதல், 9. ஒவ்வொரு தொழிற் பேட்டையில் தனியாக எலக்ட்ரிக்கல் சப்-ஸ்டேசன் (electrical feeder) அமைத்தல். 10. அரசு நிறுவனங்கள் எம்எஸ்எம்இ-யிடம் இருந்து அதிகமாக கொள்முதல் செய்தல், 11. தொழில்முனை வோருக்கான பயற்சி. 12. தனியார் தொழிற்பேட்டைக்கு அடிப்படை வசதி, 13. தொழில்பேட்டையில் தொழில் நுட்ப நூலகம் அமைத்தல். 14. தொழில் முனை வோருக்கான குடும்ப நலத்திட்டம் இத்தகைய காரணிகளை அரசு உடனடியாக கவனம் செலுத்துவது மூலமாக நம்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படும் என்று தமிழ்நாடு தொழில் முனைவோர் அமைப்பு ஒருங்கினணப்பாளர் கே.கிருஷ்ணசாமி கூறுகிறார்.