districts

img

சிந்தாதரிபேட்டை புதிய பாலம் விரைவில் திறப்பு

சென்னை, நவ. 18 - எழும்பூர் - சிந்தாதரிப்பேட்டையை இணைக்கும் வகையில் கூவம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள புதிய பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது. சிந்தாதரிப்பேட்டை - எழும்பூர் இடையே அருணாச்சலம் சாலையில் வாகன மேம்பாலம் உள்ளது. அருணா சலம் சாலையில் மீன் மார்க்கெட், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட வைகள் உள்ளன. இதன் காரண மாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும், வாகன மேம்பாலம் அகலம் குறைவாக உள்ள தல் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமானது.  இதனால் அந்தச்சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதையடுத்து சென்னை மாநக ராட்சி பழைய பாலம் அருகிலேயே புதிதாக 10 கோடி ரூபாய் செலவில் 100 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்க அமைக்க திட்ட மிட்டது. இந்த பணி 2021 ஆண்டு துவங்கி யது. கொரோனோ ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பாலப்பணி கள் தடைபட்டது. அதன்பிறகு விரைவு படுத்தப்பட்டு கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்றன. பாலத்தின் இரு முனைகளையும் சாலையோடு இணைத்தும், பாலத்தின் மீதும் தார் போடும் பணி தொடங்கியுள்ளது. அதனைதொடரந்து வண்ணம் பூச்சும் பணி நடைபெற உள்ளது. பாலத்தின் பக்கவாட்டில் இரும்பு கைப்பிடிகள், இத்தாலி நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தெரு விளக்குகள் பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், நீர் வீழ்ச்சி அமைத்து, அந்தப் பகுதியை அழகுப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் வாகன சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. அதன் பின்னர், பாலம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. எழும்பூரில் இருந்து செல்லும் வாகனங்கள் புதிய பாலத்தின் வழியாகவும், சிந்தாதரிப் பேட்டையில் இருந்து வரும் வாக னங்கள் பழைய பாலத்தின் வழியாக வும் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன. பாலத்தை பேருந்து, கார், இருச்சக்கர வாக னங்கள் என தினசரி 5 ஆயிரம் வாகனங்கள் இந்த புதிய பாலத்தில் வழியாக செல்லும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இதனால் பல ஆண்டு களாக நீடித்த போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.