சிதம்பரம், ஆக 18- சிதம்பரம் அருகே சி.அரசூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்ற னர். இந்தப் பள்ளி கட்டிடம் பயன்படுத்த முடி யாததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதனால் அதே பகுதியில் இயங்கும் நூலகத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இங்கு கழிவறை வசதி இல்லை. இந்த பள்ளியில் அடிப்படை வசதி கள் செய்து தர வலியுறுத்தியும், பெற்றோர் களிடம் காட்டமாக நடந்து கொள்ளும் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரியும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் செல்வகாந்தன் தலைமையில் குமராட்சி வட்டார கல்வி வள மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், சிபிஎம் குமராட்சி ஒன்றியச் செயலாளர் மனோகரன், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் மூர்த்தி, மாதர் சங்க நிர்வாகிகள் ரேவதி. தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் வட்டார கல்வி வள மைய கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.