districts

img

பொன்னேரி காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை

திருவள்ளூர்,ஜூலை 14- பொன்னேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி களில் மக்கள் தொகை  பெருக்கம், வாகனப்போக்கு வரத்து பெருக்கம், தனியார் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. கடந்த சில மாதங்களாக பொன்னேரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.  போலீசார் பற்றாக்குறை யால் குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை பிடிப்பதும், குற்றங்கள் ஏற்படும் முன்பு தடுப்பதும் தற்போது பெரும் சவாலாக மாறி இருக்கிறது. பொன்னேரி காவல் நிலைய எல்லையான, 8 கி.மீ., சுற்ற ளவு பகுதிக்குள், 15 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 44 பெரிய  கிராமங்கள், 22 சிறு  கிராமங்கள் நகராட்சிக் குட்பட்ட 27 வார்டுகள், ஆண்டார் குப்பம் மேட்டுப் பாளையம், ஆசான புதூர், பெரும்பேடு குப்பம். ஏலியம்பேடு, உள்ளிட்ட சுமார் 80 கிராமங்கள் வரு கின்றன. பொன்னேரி காவல்நிலையத்தில், ஒரு ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர் , 33 காவலர்கள் பணியில் இருந்தனர். ஆனால் தற்போது ஒரு ஆய்வாளர் (பொறுப்பு), ஒரு உதவிஆய்வாளர் மற்றும் 4 காவலர்கள் என மொத்தம், 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கு  பணியமர்த்தப்பட்ட போலீ சார், டி.எஸ்.பி, அலுவலகம், தனிப்படை என மாற்று பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரின் பற்றாக்குறையால், பொன்னேரி காவல் எல் லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு, குற்றசம்பவங் கள், சட்ட விரோத நடவடிக் கைகளை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே போலீஸ் பற்றாக் குறையை நீக்கி, இரவு ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.