districts

img

பெண் ஊழியர்க்கு பாலியல் வன்கொடுமை: ஒப்பந்தக்காரரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, மே 7- தெர்மல் டிடிபிஎஸ்ல் பணி புரி யும் பெண் ஊழியர் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் சிவில் ஒப்பந்தகாரர் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாதர் சங்கம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு (சிஐடியு) சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பூமயில் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலா ளர் ரசல் நிறைவு செய்து பேசினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் அப்பாத்துரை கண்டன உரையாற்றினார்.  சிஐடியு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, தெர்மல் இடைக் கமிட்டி செயலாளர்  சுரேஷ் , தலை வர் கென்னடி,பொருளாளர் சரவ ணன் மாதர் சங்க புறநகர் தலைவர் கவிதா, செயலாளர் சரஸ்வதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் செயலாளர் ராஜா, சிஐடியு தெர்மல் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

;