ஜோலார்பேட்டை,ஜன. 24- திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு ஓடும் ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவு தனிப்படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவம் இடத்திற்கு சென்ற தனிப்படையினர் ரயில் நிலையத்தில் கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்திய தாக கோனேரி குப்பத்தை சேர்ந்த ராஜகுமாரி என்பவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரனண நடத்தி வரு கின்றனர். இதேபோல் திம்மையம் பேட்டை பகுதி யிலும் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.