districts

img

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்பத்தூர் பகுதி செயலாளர் இரா.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.கருணாநிதி, ஏ.எஸ்.கண்ணன், ஆர்.துரைசாமி, பி.மாரியப்பன் (சிபிஐ), சு.லெனின் சுந்தர், சு.பால்சாமி, கே.சீனிவாசன், ரவி (சிபிஎம்), மோகனரங்கம் (காங்கிரஸ்), சிக்கந்தர், தாமோதரன் (மதிமுக) கார்வேந்தன் (திராவிடர் கழகம்), நாகராஜ் (பெரியார் திராவிடர் கழகம்), அப்துல் ரகுமான் (மனிதநேய மக்கள் கட்சி), சுந்தரமூர்த்தி (தமிழர் விடுதலைக் கழகம்) ஆகியோர் பேசினர்.