districts

ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய பெண்

கள்ளக்குறிச்சி, மே 23-

    கள்ளக்குறிச்சி மாவட்டம், வடகனந்தல் அக்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா (22), இவருக்கும் திருக்கோவிலூர் அருகே பாடியந்தல் கிராமத்தைச் சார்ந்த ஏழுமலை மகன் முருகன் என்பவருக்கும் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

   இவர்க ளுக்கு அஸ்வின் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரண மாக லலிதா தனது தாய் வீட்டில் வசித்து வரு கிறார். இந்நிலையில், செவ்வாயன்று(மே 23) லலிதா அவரது தாய் சரஸ்வதியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார்.  

    ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கு எதிரே நின்று கொண்டு தனது மகனை மீட்டுத் தர வேண்டும் எனக் கூறி கதறி அழுதார்.