districts

img

பெரியார் கலைக் கல்லூரியில் அறிவியல் பயிற்சி பட்டறை

கடலூர்,மார்ச் 13- கடலூர் பெரியார் கலை கல்லூரியில் அறிவியல் அகாடமி சார்பில் மேம்பட்ட பொருட்களின் சமூக பயன்பாடுகள் மீதான விரிவுரை பயிற்சி பட்டறை துவங்கியது. மார்ச் 13முதல் 15 மூன்றுநாட்கள் நடைபெறும் இந்த பட்டறையை  பெங்களூரு இந்தியன் அகாடமி ஆப் சயின்ஸஸ், புது டெல்லி இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாடமி மற்றும் பிரக்யா ராஜ் நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ் இந்தியா மற்றும் பெரியார் கலைக்கல்லூரியின் இயற்பியல் துறையும் இணைந்து நடத்தின. துவக்க விழாவில் கல்லூரியின் முதல்வர் பேராசிரியை ராமகிருஷ்ணன் சாந்தி,  சென்னை செயின்ட் பீட்டர் பல்கலைக்கழகத்தின் முனைவர் சேது குணசேகரன்,திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை பேராசிரியர் ஜெயசங்கர், சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராமமூர்த்தி, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குநர் ஜான் பிலிப் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் டி.பாரதி மோகன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.  ஒளிரும் பொருட்கள், மேம்பட்ட பொருட்கள், சீரற்ற ஒளியியல் பொருட்கள்,   அகச்சிவப்பு நிறமாலையில் புதிய பொருட்கள் மற்றும் நானோ பொருட்கள் என பல்வேறு பொருட்களின் உற்பத்தி மற்றும் அதன் சமூக பயன்பாடுகளை மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. விழாவில் வேதியல் துறையின் தலைவர் ஷர்மிளா இந்திராணி,  துறை பேராசிரியர் தம்பிதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக இயற்பியல் துறையின் துறை தலைவர்  க.இரவிச்சந்திரன் வரவேற்புரை வழங்கினர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி பட்டறையின் குழு தலைவர் ராமமூர்த்தி மற்றும் பெரியார் கலை கல்லூரியின் இயற்பியல் துறை இணை பேராசிரியர்  திலக்குமார் ஒருங்கிணைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அறிவியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள்   கலந்து கொண்டனர்.