வடசென்னை மாவட்டம் அம்பத்தூர் மங்களபுரம் பகுதியில் பாலர் பூங்கா சார்பில் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த வகுப்பு நடைபெற்றது. இதில் விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு உரையாடினார். நிகழ்ச்சியில் பாலர் பூங்கா பொறுப்பாளர் எம்.கோடீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.