districts

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேரிடம் விசாரணை

விழுப்புரம், மார்ச் 7- விக்கிரவாண்டி அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவனும், மாணவியும் கடந்த மாதம் 25 ஆம் தேதி கப்பியாம் புலியூர் ஏரிக்கரையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் அந்த மாணவனை வெட்டினர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.  பின்னர் கத்தி முனையில் அந்த மாணவன் கண்முன்பே மாணவியை 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடு மைக்குள்ளாக்கினர். மேலும் செல்போன், வெள்ளி கொலுசு, மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.  இதுகுறித்து விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் மகளிர் போலீசார் 7 பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 8 தனிப்படை அமைத்து அதில் தொடர்புடையவர் களை தேடி வந்தனர். இந்த தனிப்படை காவல்துறையினர் ஏரிக்கரை யிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரையிலுள்ள செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். அதில் விக்கிரவாண்டி அருகே உள்ள மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்த வாலிபர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை யிலிருந்த ஒருவரையும் பிடித்து வந்து தனிப்படை காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.