கள்ளக்குறிச்சி, டிச.31 – பள்ளி-கல்லூரி மாண வர்களுக்காக காலை மற்றும் மாலையில் போதிய நகரப் பேருந்துகளை நாள்தோறும் இயக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், செம்மனூர் கிராமத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் தினமும் குறித்து நேரத்தில் சென்று வீடு திரும்ப முடிய வில்லை. எனவே மாணவர்க ளின் நலனை கருத்தில் கொண்டு, தடம் எண் 10 நகரப்பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநாவலூர் மேற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் வி.ராஜூ தலைமையில் உளுந்தூர் பேட்டை பணிமனை முன்பு செவ்வாயன்று (டிச.31) முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் உளுந்தூர்பேட்டை பணி மனை மேலாளர் நாக ராஜன் மற்றும் சிபிஎம் தலை வர்கள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடை பெற்றது. இன்னும் ஒரு மாதத்திற்குள் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதையடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.செந்தில், டி.எஸ்.மோகன், ஒன்றியச் செயலாளர் கே. ஆனந்தராஜ், கே.ஐயனார், பி.சுப்பிரமணி, டி.ரகு, கே. சக்கரவர்த்தி, வி.சுரேஷ் எஸ்.ஆரோக்கியதாஸ், டி.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.