districts

img

மின்சார வசதியின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள் தீப்பந்த வெளிச்சத்தில் படிக்கும் பள்ளிக் குழந்தைகள்

திருவண்ணாமலை,பிப்.1- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ளது தென் சேந்தமங்கலம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஏரிக்கரையின் ஓரத்தில் இருளர் இனத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். பல கட்டப் போராட்டங்களுக்கு பிறகு, 2021 ஆம் ஆண்டு குன்று பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு, பட்டாவும் கொடுக்கப்பட்டது. அந்தப் பகுதிக்கு குடிபெயர்ந்த பழங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசின் பிஎம்ஏஓய்  திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரைக்கும் மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. இதனால், அந்த பகுதி இருளில் மூழ்கி யுள்ளது. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள் தீப்பந்த வெளிச்சத்தில் கல்வி பயிலும் அவல நிலை ஏற்பட்டிருப்பதோடு,  இரவு நேரங்களில் விஷ பாம்பு உள்ளிட்ட பூச்சிகளின் தொந்தரவால் அச்சத்துடனே உறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து மின்சார வாரியம், வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ), மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர் அனைவரிடமும் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தங்களது வேதனைகளை வெளிப்படுத்துகின்றனர் பழங்குடி மக்கள். எனவே, தென் சேந்த மங்கலம் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உடனடி யாக மின் வாரிய அதிகாரி களை அனுப்பி ஆய்வு மேற்கொள்வதுடன், அப்பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்பு களுக்கும் மின்சார இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.