districts

img

தூய்மை பணியாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

ராணிப்பேட்டை, அக். 19 - ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய  பாரத மிகு மின் நிறுவனத்தில்  பணிபுரியும் தூய்மை பணி யாளர்கள் மாதந்தோறும் ஊதியம் வழங்கக் கோரி வியாழனன்று (அக். 19) நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு துண்டை விரித்து  தொழிற்சாலை ஊழியர்க ளிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தொழிலா ளர்கள் கூறுகையில், பாரத  மிகு மின் நிறுவனத்திற் குட்பட்ட குடியிருப்பு பகுதியில் தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறோம். தற்போது 34 தொழிலாளர்கள் மட்டுமே உள்ளதால் வேலைப் பளு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல மாதங்க ளாக ஊதியம் வழங்கப் படவில்லை. ஊதியம் வழங்கப்படும் மாதங்களில் கூட மாதத்தின் முதல் 10  நாட்களுக்குள் வழங்கப் படாமல், மாதத்தின் இறுதி நாட்களில் வழங்கப்படு வதாக பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிவித்தனர்.