districts

சட்ட விரோதமாக செயல்படும் நபர்கள் மீது அரசு நடவடிக்கை

திருவள்ளூர், நவ. 2- தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பூந்தமல்லி ஒன்றியத்தில் சட்ட விரோதமாக செயல்படும் நபர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதிருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம் வலியுறுத்தியுள்ளார்.  தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில்பூந்தமல்லி ஒன்றியத்தில் வட்டார அளவிலான கூட்ட மைப்பிற்கு நிர்வாகிகளாகவும் உறுப்பினர்க ளாகவும் தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில்  அரசு விதிமுறைகளின் படி வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கு  மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கும் பண பரிவர்த்தனை மற்றும் பயிற்சிகள் பணியாளர்களின் ஊதியம் அனைத்தும் வட்டார அளவிலான கூட்டமைப்பின் தீர்மானத்தின் அடிப்படையில் செயல் படுத்தப்பட்டு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த நிலையில்  யாருக்குமே தெரி யாமல் தீர்மான புத்தகத்தில் கடந்த ஆகஸ்ட்  2023 ஆம் ஆண்டு முதல் 2024 செப்டம்பர் வரை வட்டார அளவிலான கூட்ட மைப்பின் கூட்டத்திற்கு நிர்வாகி களை அழைக்காமலேயே பணியாளர்களே கூட்டத்தை நடத்தி போலியான கையொப்பங்களை தீர்மான புத்தகத்தில் இட்டு தீர்மானத்தை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறார்கள் என்றும், காசோலையில் மட்டும் காசோலை புத்தகத்தை பணியாளர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் செயலாளரிடமும் பொருளாளர் இடமும் வீட்டுக்கு சென்று கையெழுத்து வாங்கி வங்கியில் பண பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறார்கள்.   வட்டார அளவிலான கூட்டமைப்பின் தலைவரையோ உறுப்பினர்களையோ  கூட்டத்திற்கு அழைக்காமல் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகின்றனர்.  இது மக்கள் அமைப்பு என்று தெரிந்தும் பணியாளர்களே முடிவு செய்து கொண்டு  பணப்பரிவர்த்தனை செய்து போலியான கையெழுத்துக்களை பணியாளர்களே போட்டு விட்டு அனைத்து கூட்டங்களையும் பணியாளர்களே நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட பணியாளர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து அவர்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.   இதனை தொடர்ந்து அக் 3 அன்று மாவட்ட திட்ட இயக்குநர் புகார் கொடுத்த வட்டார அளவிளான கூட்டமைப்பின் நிர்வாகிகளை அழைத்து விசாரணை என்ற பெயரில் மிரட்டுவது கண்டனத்திற்குறியது.  மகளிர்களை செயல்பட விடாமல் பணி யாளர்களை வைத்து செயல்படுத்தும்  திட்ட இயக்குநர் மீது தமிழ்நாடு அரசும், முதல மைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம் வலியுறுத்தினார்.