காஞ்சிபுரம், மார்ச் 6 - வாலாஜாபாத் அருகே பட்டப்பகலில் கட்டுமான பணி செய்யும் மேஸ்திரி வீட்டின் பீரோவை உடைத்து 13 சவரன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த அவளூர் ஊராட்சியில் அண்ணா தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் கட்டுமானப் பணியை செய்யும் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வெளி யூர் சென்றிருந்த வேளை யில் பட்டப்பகலில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தை அறிந்து காவல்துறையினர் தடயங் களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.