திருவண்ணாமலை, நவ.16- சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், நகர விற்பனை குழுவில் இரண்டு பங்கு இடங்களை சாலையோர வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளு வண்டிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செய்யாறு நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பிகா தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் இரா. பாரி, மாநிலக் குழு உறுப்பினர் வெ. சங்கர், சிபிஎம் வட்டார செயலாளர் டி. வெங்கடேசன், நிர்வாகிகள் கே. செல்வம், தங்கராமன், மாரிமுத்து, சுப்பிரமணி, பச்சையப்பன், சுதர்சனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.