districts

img

கொருக்குபேட்டை மீனாம்பாள் நகரில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

சென்னை, பிப். 4- கொருக்குபேட்டை பகுதியில் சாலை அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் தொடங்கி வைத்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர், முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் 190 குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகின்றனர்.அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்வதில் சட்ட சிக்கல் உள்ளது. எனினும் குடிநீர். மின்விளக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலை வசதி இல்லாமல் இருந்தது. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அங்கு சாலை அமைத்து கொடுப்பதாக தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தனது சொந்த நிதியாக ரூ 20 லட்சம்  மதிப்பீட்டில் 400 மீட்டர் நீளத்திற்கு ஹாலோ பிளாக் சாலை அமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சிறிய தண்ணீர் தொட்டி வைப்பதற்கு பீடம் அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.