districts

img

வருவாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

கடலூர்,பிப்.27- 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி வரு வாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப் பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்தி ருந்த ஆணையை உடனே வெளியிட வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்  உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர்கள் செவ்வாய் (பிப்.27) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  அதன்படி கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் சுமார் 400 வருவாய் துறை ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டதையொட்டி கடலூரில் ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவல கங்களில் பணிபுரியும் வருவாய் துறை ஊழி யர்கள் பணிக்கு வராத தால் வெறிச்சோடி காணப் பட்டது.