சென்னை, செப். 17- சென்னை மாநகராட்சி சிறுகடை வியா பாரிகள் சங்கத்தின் 18ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் ராயபுரத்தில் தலைவர் கே.செல் வனந்தன் தலைமையில் செவ்வாயன்று (செப். 17) நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பேரவை துவக்கி வைத்து பேசினார். கே.பலராமன் செயலாளர் அறிக்கையையும், எஸ்.பாலையா வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சென்னை மாவட்ட சாலையோர விற்பனையாளர் சங்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் டி.வெங்கட், பொரு ளாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், நகர விற்பனைக்குழு உறுப்பினர் கி.மோனிஷா, துணைத் தலைவர்கள் தமீம் சேட், பொ.பூபதி, துணைச் செயலாளர் எஸ்.அறிவழ கன், சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஜெயராமன் பேரவையை நிறைவு செய்து பேசினார். தீர்மானங்கள் சாலையோர வியாபாரிகளை முன்னறி விப்பு இன்றி ஆக்கிரமிப்பு என முத்திரைகுத்தி அகற்றக்கூடாது, எம்.சி.ரோடு வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு ஷட்டர் அமைக்க வேண்டும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், மழைக்காலம் தொடங்கும் முன் தரை அமைக்கும் பணிகளை துவக்க வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெறுவதால் பாதிக்கப்பட்டுள்ள எம்.சி.ரோடு - ஜி.ஏ.ரோடு வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நிர்வாகிகள் கவுரவத் தலைவராக கே.பலராமன், தலைவராக கே.செல்வானந்தன், செயலாள ராக எஸ்.காசிம், பொருளாளராக எஸ். பாலையா உள்ளிட்ட 23 பேர் தேர்வு செய்யப் பட்டனர்.