சென்னை, ஜூன் 20- சாலையோர சிறுகடை களை அகற்றும் மாநகராட்சியின் நடவடிக்கையை கண்டித்து சென்னை மாநகர் சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி 5 வது மண்டல அலு வலகம் முன்பு திங்களன்று (ஜூன் 20) காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத்தலைவர் திரு வேட்டை தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் பேசிய கூட்ட மைப்பின் பொதுச்செயலாளர் எம்.வி.கிருஷ்ணன்,என்.எஸ்சி போஸ் சாலையில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சிறுகடைகளை மாநகராட்சி அகற்றுவதை உடனே கைவிடவேண்டும் என்றார். என்எஸ்சி போஸ் சாலையில் இருக்கக்கூடிய கடைகளில் 276 சிறுகடை வியாபாரிகள் வியாபாரம் செய்யக் கூடாது என்று நீதி மன்றத்தில் தடை உள்ளதாக மாநகராட்சி கூறுகிறது. எதற்கு தடை என்பதை உயர்நீதிமன்றமும் மாநகராட்சியும் சொல்லவில்லை என்றும் அவர் கூறினார். சிறுகடைகளுக்கு எதிராக வழக்கு போட்ட டிராபிக் ராமசாமி இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆனாலும் வழக்கு உயிரோடு இருக்கிறது. 387 பேருக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு 276 பேருக்கு மட்டும் இடம் கொடுக்க மறுப்பது நியா மற்றது. 276 வியாபாரிகளுக்கு மாற்று இடம் கொடுக்காமல் தற்போதுள்ள இடத்தை காலி செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் கிருஷ்ணன் உறுதிப்படத் தெரிவித்தார். போராட்டத்தை வாழ்த்தி சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா பேசினார்.