கடலூர்,மார்ச்.19- நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சரியாக ஒரு மாதம் இருக்கும் நிலையில் வேட்பு மனுத்தாக்கல் புதன்கிழமை (மார்ச் 20) தொடங்குகிறது. கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலருமான அருண் தம்புராஜ் வேட்பு மனுவை பெறுவார். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் அளவில் தற்போது கோடுகள் போடப்பட்டுள்ளது.200 மீட்டருக்குள் ஒரு காரில் வேட்பாளர் உட்பட 5 பேர் வரலாம். 100 மீட்டர் வரை காரில் வரும் அவர்கள் 100 மீட்டருக்கு பிறகு காரை விட்டுவிட்டு இறங்கி நடந்து செல்ல வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு 100 மீட்டர் வரை அதே போல் மீண்டும் நடந்து செல்ல வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் 360 டிகிரி என்ன சுழலக் கூடிய கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.வேட்புமனு தாக்கல் செய்ய வரும் அனைத்து பகுதிகளும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது.