districts

img

கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மைதானத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட எதிர்ப்பு

கிருஷ்ணகிரி, பிப் 22. கிருஷ்ணகிரி நகரில் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் மகளிர் பள்ளி யில் விளையாட்டுத் திடல் இல்லை. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலுள்ள விளை யாட்டு மைதானம் 400 மீட்டர் ஓடு தளத்துடன் இருந்தது. இதனால் தடகளம் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுப் போட்டிகளுக்கும் பயன்பட்டு வந்தது.  மாணவர்கள் காலை, மாலை மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு பயிற்சி எடுத்து வந்தனர். மேலும், பொதுமக்களும் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி இந்த மைதானத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் பெற்றோர், மாணவர்கள், மக்களின் எதிர்ப்பை மீறி விளையாட்டு மைதானத்தில் அரசின் பிற துறை அலுவலகங்கள், அரசு மருத்துவமனை கட்டிடங்கள், மாணவியர் விடுதிகள் கட்டப் பட்டது. இதனால் 400 மீட்டர் ஓடு தளம் சுருங்கி, தடகளப் போட்டி கள், விளையாட்டு போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்களின் விளை யாட்டுத்திறன் கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில், விளையாட்டு மைதானத்துக்குள் புதிய அரசு அலுவலகங்கள் கட்ட இருப்ப தாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் இந்த பள்ளியிலுள்ள விளையாட்டு மைதானம் மேலும் சுருங்கிவிடும். புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டால் அரசுப் பள்ளி மாணவர்கள் விளையாட்டையே மறக்க வேண்டிய, நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது மாணவர்களின் உடல், மன நலத்திற்கும், பள்ளிக்கும் கேடு விளைவிக்கும். எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இதை தடுக்க வேண்டும். மாண வர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகை யில் மைதானத்தை மேம்படுத்த வேண்டும் என பெற்றோர் ஆசி ரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழுவினர் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட கல்வி அலுவலரிடமும் மனு அளித்தனர்.