districts

img

பி.வி.நகர் மயான நிலத்தை மாநில அரசுக்கு வழங்க பாதுகாப்பு துறைக்கு கோரிக்கை

சென்னை, டிச. 1 - மயானம் அமைந்துள்ள நிலத்தை மாநில அரசுக்கு  வழங்க கோரி ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச் சருக்கு வியாழனன்று (டிச.1) அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. ஆலந்தூர் தொகுதி, நங்கநல்லூரில் பக்தவச்ச லம் நகர் (பி.வி.நகர்)  உள்ளது. இங்குள்ள மயானம் கண்டோன்மெண்ட் இடத்தில் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மயானத்தை பி.வி.நகர், டீச்சர்ஸ் காலனி, பர்மா காலனி, ரகுபதி நகர், ரத்தினம் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயன்படுத்தி வருகின்றனர். மயானம் அமைந்துள்ள இடம் கன்டோன்மண்ட் வசம்  உள்ளதால் மாநகராட்சியால் பராமரிப்பு பணிகளை செய்ய முடியவில்லை. இதனால் அந்த இடம் புதர் மண்டி கிடக்கிறது. இந்த பகுதிக்கு அருகே உள்ள பழவந்தாங்கல் மயானம் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஆகவே,  இந்த மயானத்தை மேம்ப டுத்தி, மின்மயானமாக மாற்ற அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர். இதற்கு ஏதுவாக, மயானம் அமைந்துள்ள நிலத்தை மாநில அரசுக்கு  வழங்க கோரி பாது காப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்கிற்கும், அதற்கான நடவடிக்கை களை எடுக்க கோரி திரு பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு வுக்கும் 1000 அஞ்சல் அட்டை  அனுப்பும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி தொடங்கியது. இந்த இயக்கத்தை மூவரசம்பட்டு பிரதான சாலையில் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர் களிடம் பேசிய அவர், “நகரங்கள் விரிவடையும் போது புதிய இடத்தை தேர்வு செய்வது பெரும்  பிரச்சனையாக உள்ளது.  மயானத்தை மேம்படுத்த கோரி  40 வருடங்களாக மக்கள் வலியுறுத்தி வரு கின்றனர். அதற்கேதுவாக மயான நிலத்தை மாநில அரசுக்கு ஒன்றிய பாது காப்புத்துறை அமைச்சகம்  மக்கள் பயன்பாட்டிற்குத்தர வேண்டும். அந்த இடத்தில் மாநகராட்சி மின் மயானம் அமைக்க வேண்டும்” என்றார். கட்சியின் ஆலந்தூர் பகுதிச் செயலாளர் நா.வெங்கடேசன் தலைமை யில் நடைபெற்ற இந்த  இயக்கத்தில் தென் சென்னை மாவட்ட செயற் குழு உறுப்பினர் ம.சித்ர கலா, மாவட்ட குழு உறுப்பி னர் எஸ்.அரிகிருஷ்ணன், பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.மோகன்ஜி, கே.முரளி, கே.வி.சிவகுமார், நங்க நல்லூர் கிளை செயலாளர் கே.பாரதி உள்ளிட்டோர் பேசினர்.