மலிவு விலையில் பொருட்களை வழங்க பண்டிகைக்கால கடைகளை திறக்க கோரி சனிக்கிழமையன்று (அக்.26) புரசைவாக்கத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் ஆ.சாந்தி, செயலாளர் வெ.தனலட்சுமி, நிர்வாகி ஏ.நாகராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.