districts

பண்டிகை கால கடைகளை திறக்க கோரிக்கை

மலிவு விலையில் பொருட்களை வழங்க பண்டிகைக்கால கடைகளை திறக்க கோரி சனிக்கிழமையன்று (அக்.26) புரசைவாக்கத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் ஆ.சாந்தி, செயலாளர் வெ.தனலட்சுமி, நிர்வாகி ஏ.நாகராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.