சென்னை, அக். 8- பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர் கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னைக்கான 2ஆவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள் 50 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். விமான நிலை யம் அமைந்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்றும் அவர்கள் தெரி வித்துள்ளனர். இந்நிலையில், இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கான 2 ஆவது விமான நிலை யம் பரந்தூரில் அமைப்பதற் கான பணியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடு பட்டுள்ள நிலையில், தனி யாருக்கு தாரைவார்க்க உதவும் வகையில் ஒன்றிய அரசின், “கிரீன்ஃபீல்டு விமான நிலைய” கொள்கை யின் கீழ் பரந்தூர் விமான நிலையம் அறிவிக்கப் பட்டுள்ளதாக கூறியுள்ளது. வளர்ச்சித் திட்டங்க ளுக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை அரசு தவிர்க்க வேண்டும் என்று நிலம் கையகப்படுத்தும் சட்டம் பிரிவு 10 கூறும் நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட உள்ள 4 ஆயிரத்து 563 ஏக்கரில், 3 ஆயிரத்து 246 ஏக்கர் விவசாய நிலம் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்திற்கு 13 கிராமங் கள் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றன. குறிப்பாக, ‘ஏகனா புரம்’ கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும், விவ சாய நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு, அந்த கிராமம் இந்திய வரைபடத்தில் இருந்தே துடைத்து எறியப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பரந்தூர் விமான நிலையம் வந்து விட்டால் அதன் அருகே நிலங்களின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துவிடும் என்பதால், அரசு கொடுக்கும் இழப்பீட்டு தொகை மூலம் எளிய மக்க ளால் அப்பகுதியில் நிலம் வாங்க முடியாது. எனவே 13 கிராம மக்களின் நலன் கருதி பரந்தூர் விமான நிலைய திட்டத்தை, தமிழக அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.