districts

img

கிராமத்திற்கு அருகாமையில் கல் குவாரி: அனுமதியை ரத்து செய்ய கோரிக்கை

கிருஷ்ணகிரி,பிப்.10- கிருஷ்ணகிரி மாவட்டம், அந்தேவனப் பள்ளி அருகில் உள்ள காரண்டப்பள்ளி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட முழு வனப்பள்ளி. இந்த கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி உள்ள சர்வே எண் 221/1,2,3,4 ல்  ஜனவரி 24 அன்று ‘முத்து’என்கிற தனியாருக்கு சொந்தமான கல்குவாரி தொடங்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காரணம், வீடுகளுக்கும் கல்கு வாரிக்கும் இடையே 150 மீட்டர் தூரம் கூட இடைவெளி கிடையாது. இதனால், கல்குவாரியில் வைக்கும் வெடிகளால் ஏற்படும் அதிர்வுகளால் வீடுகளின் சுவர் விரிசல் அடைந்துள்ளது. மேலும், வெளி யில் சிதறும் கற்களால் உயிருக்கு ஆபத்து விளைக்கும் சூழல் நிலவுகிறது. வெடி சத்தத்தால் இரவு நேரங்களில் தூங்க கூட முடிவதில்லை. விவசாயமும் பாதிக்கிறது. கால்நடைகள் அனைத்தும் அலறி அடித்து ஓடுகின்றன.  90 டன் எடை கொண்ட கிரானைட் கற்களை ஏற்றி கொண்டு செல்லும் லாரிகளால் சாலை பழுதடைந்து வருகிறது. எனவே, கிராம மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனியார் கல்குவாரிக்கு கொடுத்த உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், தங்களின் நியாயமான கோரிக்கைக்காக பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர் சாம ராஜ், தளி ஒன்றிய செயலாளர் வெங்க டேஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சந்திரசேகர் தலை மையில் கனிம வளத்துறை துணை இயக்குநரிடம் கொடுத்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட துணை இயக்குநர் இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்வதாக தெரிவித்தார்.