districts

img

அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பிடக்கோரிக்கை

சென்னை, பிப். 9- அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தாளுநர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு  அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் வடசென்னை மாவட்டம் சார்பில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று (பிப். 9)  நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கருணாகர ரமேஷ் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் வி.விஜயகுமரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட துணைத் தலைவர்  விவேகானந்தன், மாவட்ட இணைச் செயலா ளர் மகேந்திரன், தங்க சாலை பகுதி செயலா ளர் தாமோதரன், மருந்தாளுநர் சங்க நிர்வாகிகள் ஆனந்தி, கார்த்தியாயினி, கோவிந்தசாமி, குமார் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். இதுகுறித்து மாநிலத் தலைவர் விஜய குமரன் கூறுகையில், 2018ஆம் ஆண்டிற்கு பிறகு மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் தற்போது 1,400க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி யாக உள்ளதால், பொது மக்களுக்கு மருந்தியல் சேவையில் தொய்வு ஏற்படுகி றது. மேலும் அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து மருந்துகளை பெற வேண்டிய நிலை. போதிய எண்ணிக்கையில் மருந் தாளுநர்கள் இல்லாததால் பணிச் சுமை யோடு வார ஓய்வின்றி, விடுப்பு இன்றி மன உளைச்சலோடு பணியாற்ற வேண்டி யுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 800க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணி யிடங்கள் காலியாக உள்ளதால் தடுப்பூசி மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வீரியம் குறையாமல் உரிய வெப்பநிலையில் பாதுகாத்து களப்பணிகளுக்கு சீராக வழங்கும் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே மக்களின் நலன் கருதி மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றார். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  அரசு விதிகளை பின்பற்றி பணியமர்த்தப் பட்ட 39 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களை அரசாணைப்படி பணி வரன்முறை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.