திருவள்ளூர், ஜூன் 8-
கண்ணம்பாக்கம் இருளர் இன மக்களுக்கு சொந்தமான சுடுகாடுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற, மாவட்ட ஆட்சியர் உத்தரவை காலதாமதம் செய்யாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி வட்டம், கண்ணம் பாக்கம் ஊராட்சியில் இருளர் இனத்தை சேர்ந்த 36 குடும்பங்கள் பூர்வீகமாகக் வசித்து வருகின்றனர்.இந்த பகுதி மக்களுக்கு சாலை, குடிநீர் போன்ற தேவைகளை நிறை வேற்றி இருந்தாலும், சுடுகாட்டிற்கு செல்லும் பாதை இல்லை என்பது வேதனைக்குறிய விசயமாகும்.
சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு, சுடுகாட்டு பாதை மற்றும் அருகில் உள்ள நிலங்கள் என 2.17.5 ஹேக்டேர் அளவிற்கு புஞ்சை அனாதீனம் அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த நிலம் தற்போது மாந்தோப்புகளாக உரு வாக்கியுள்ளது. இந்நிலையில் யாராவது இறந்தால் முள் வேலியை அகற்றி விட்டு சடலத்தை கொண்டு செல்கின்றனர்.
இந்த நிலத்தின் வழியே சடலத்தை கொண்டு செல்ல கூடாது. அது எங்கள் நிலம் என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர்.
இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து இருளர் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். சுடுகாட்டுப் பாதையை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு விசா ரணைக்கு பிறகு ஆக்கிரமிப்பு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து, ஓர் ஆண்டு ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
மலைவாழ் மக்கள் சங்கம் வேண்டு கோள்
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, விவசாயிகள் சங்கத்தின் வட்ட செயலாளர் எம்.சிவக்குமார் ஆகியோர் புதனன்று (ஜூன் 7) கண்ணம்பாக்கம் இருளர் இன மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று அம்மக்களிடம் பேசினர். மேலும் ஆக்கிர மிப்பு செய்யப்பட்ட இடத்தையும் பார்வை யிட்டனர். இருளர் இன மக்களின் சுடு காட்டுப் பாதையை அகற்ற மாவட்ட ஆட்சி யரின் உத்தரவை, கும்மிடிப்பூண்டி வட்டாட்சி யர் உடனடியாக அமலாக்க வேண்டும், பாதை மற்றும் சுடுகாட்டை அளந்து கல் நட வேண்டும், உயர்சாதி இந்துக்கள் உள்ளிட்ட 12 சாதியினரும் இந்த ஒரே சுடு காட்டை பயன்படுத்துவதால், புதர் மண்டி கிடக்கும் சுடுகாட்டை சுத்தம் செய்து விரிவு படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.