districts

img

வீடூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

விழுப்புரம்,பிப்.11- விழுப்புரம் மாவட்டம், வீடூர் அணையிலிருந்து பாசனத்துக்காக ஞாயிற்றுக் கிழமை (பிப்.11) தமிழ்நாடு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தண்ணீர் திறந்து விட்டார். வராக நதி மற்றும் தொண்டியாறு முறையே செஞ்சி வட்டம், பாக்கம் மலைத்தொடரில் இருந்தும், தொண்டூர் ஏரியில் இருந்து உற்பத்தியாகி வீடூர் அணையில் ஒன்று சேர்கிறது. பிறகு, சங்கரா பரணியாக புதுச்சேரி அருகே வங்கக் கடலில் கலக்கிறது.  வீடூர் அணையின் மொத்த நீளம் 4,500 மீட்ட ராகும். அணையின் பிரதான கால்வாய் மூலம் 5 கிளை கால்வாய்கள் வழி யாக தமிழ்நாட்டில் 2,200 ஏக்கர், புதுவை மாநிலத்தில் 1,000 ஏக்கர் என மொத்தம் 3,200 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.  இந்த ஆண்டு பருவ மழைக் காலத்தில் மழை பெய்தும் வீடூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டவில்லை. தற்பொழுது 579.575 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.  இந்த நிலையில், பாசன ஆயக்கட்டுதாரர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் நீர் இருப்புக்கு ஏற்றவாறு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, ஒரு போக பாசனத்திற்கு பிப்.11 முதல் 135 நாட்கள் தேவைக்கேற்ப பாச னத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், வீடூர் அணையிலிருந்து விவ சாய பாசனத்திற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தண்ணீர் திறந்து விட்டார். இந்நிகழ்ச்சியில் மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார், ஒன்றியக்குழுத் தலைவர். யோகேஸ்வரி மணிமாறன் மற்றும் நீர்வளத்துறை செயற் பொறியாளர் பா.ஷோ பனா. உதவி செயற் பொறி யாளர் மு.ரமேஷ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள். விவசாயிகள் கலந்து கொண்டனர்.