districts

img

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு

சென்னை, ஜன.8- சென்னை புறநகர் பகுதி களில் கடந்த இரு தினங்க ளாக பரவலாக மழை பெய்து வந்தது. மேலும், இரு  தினங்களுக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியதால், முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக செம்பரம்பாக்கம் ஏரியின் 19 கண் மதகு வழி யாக ஞாயிறன்று 25 கன அடி  உபரி நீர் திறந்து விடப் பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில்  மாலை நிலவரப்படி  நீர்மட்ட உயரம் 21.93 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3102 மில்லியன் கன அடியாகவும், நீர்வ ரத்து மணிக்கு 36 கன அடியாகவும் உள்ளது. மேலும், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரு வதன் காரணமாக செம்பரம் பாக்கம் ஏரியின் நீர்மட்டம்  உயரம் 22 அடியை நெருங்கு கிறது. கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்  ஆதாரமாக உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பிய நிலையில், தற்போதும் பரவலாக மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர  கூடும் என்பதால், முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 25 கன அடி  உபரி நீர் திறந்து விடப்பட் டுள்ளது.