‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழாவும், விடுதலை 89ஆம் ஆண்டு தொடக்க விழாவும் வியாழனன்று (ஜூன் 1) சென்னை பெரியார் திடலில் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. கவிஞர் ஈரோடு தமிழன்பன் ‘விடுதலை களஞ்சியம்’ முதல் தொகுதியை வெளியிட விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார். இதில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், எழுத்தாளர் ப.திருமாவேலன், திமுக செய்தி தொடர்புக்குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.