districts

img

சீரான குடிநீர், மின்சாரம் விநியோகம் ராணிப்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை, மே 6 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது குடிநீர் பிரச்சினைகள் மற்றும் மின்சார பிரச்சனை கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தலைமையில் துறைச்சார்ந்த அலு வலர்களுடன் ஆலோசனை கூட்டம் திங்க ளன்று (மே. 6) மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த வாரம் பொது மக்கள் சீரான குடிநீர் வேண்டி புகார் அளித்த பிரச்சினைகள் குறித்து, குடிநீர் குழாய்கள் உடைப்பால் ஏற்பட்ட பிரச்சி னைகள் மற்றும் மின்சார பிரச்சனைகளால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது, குறித்து விரிவாக கேட்டறிந்தார். கோடை காலத்தில் ஆங்காங்கே திருவிழாக்கள் பண்டிகைகள் தொடங்கும். அப்பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் நடைபெறுவதையும், ஓ.ஆர்.எஸ் பவுடர் பகுதிகளில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். பண்டிகைகள் நடைபெறுவது குறித்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இப்பணிகளையும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தெரிவித்துள்ளார். இதில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க. லோகநாயகி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் சுதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;