districts

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர்களை தேடும் போலீஸ்

சென்னை,மார்ச் 4- வட மாநில தொழிலாளர்கள் விவ காரம் தொடர்பாக வதந்தி பரப்பிய தாக 3 பேர் மீது வழக்குப் பதிவு  செய்யப்பட்டுள்ளது. இவர்களை  கைது செய்ய தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது. பீகார் உள்ளிட்ட வட மாநிலங் களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்க ப்படுவதை போலவும், தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனவும் சொல்லி சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவதூறாக பரவி  வருகிறது. இந்நிலையில், வட மாநிலத் தொழிலாளர்கள், 0421-22-3313, 9498101300, 9498101320 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக காவல் துறை அறி வித்துள்ளது. இந்தச் சூழலில் வதந்தி பரப்பிய வர்கள் மீது காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இதன்படி, திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மற்றும்  திருப்பூர் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் நிலையங்களில் தைய்னிக் பத்திரிகையின் ஆசிரியர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளது. தூத்துக்குடி மாவட்டம், சென்ட்ரல் காவல் நிலையத்தில் பிரசாத் உமாராவ் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. மேலும், தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும், வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று தமிழ்நாடு காவல் துறை தலைவர்சைலேந்திர பாபு தெரி வித்துள்ளார்.