ரியல் எஸ்டேட் நிறுவன சங்க மாநாடு
சென்னை,ஜன.25- ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கான நாட்டின் முதன்மை யான சங்கமான நார்-இந்தியா, 16வது ஆண்டாக ‘நார்விகேட் 2024’ ரியல் எஸ்டேட் மாநாட்டை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த மாநாடு கோவாவில் அடுத்த மாதம் 29-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் என, 1500க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் தொழிலைச் சேர்ந்த வல்லுனர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால போக்குகள்குறித்து அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் முக்கிய நபர்கள் பங்கேற்று விவாதிக்க இருக்கிறார்கள்.
மாடுகளை ஏலம் விட முடிவு
சென்னை,ஜன.25- சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்ப னையாகாமல் வீணாகும் காய்கறி மற்றும் பழங்கள் சந்தை வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது. இவைகளை சாப்பிடு வதற்காக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான எறுமை மாடுகள் சந்தைக்கு வரு கின்றன. இப்படி வரும் நூற்றுக்கணக்கான மாடு களால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சந்தை பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரி கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதையடுத்து கோயம் பேடு மொத்த காய்கறி, கனி சந்தை பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவ லர் இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன இப்படி பிடிக்கப்படும் மாடு களை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பொருட்காட்சி குவியும் பார்வையாளர்கள்
சென்னை, ஜன.25- சென்னை தீவுத்திட லில் 48வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட் காட்சி காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியின் 11 வது நாளான ஜன.24 வரைக்கும் மொத்தம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 524 பேர் பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து விடுமுறை வரு வதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.