புயல் மழையால் பாதிக்கப்பட்ட ராயபுரம் ராமதாஸ் நகர், பிரிவில் தோட்டம், போஜராஜ நகர் மக்களுக்கு போர்வை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வண்ணாரப்பேட்டை பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், எம்.சி. ரோடு வணிக வளாக நடைபாதை வியாபாரிகள் சங்கம், வள்ளலார் வியாபாரிகள் சங்கம் மற்றும் தனிநபர்கள் உதவியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் பவானி, பகுதிக்குழு உறுப்பினர்கள் வெங்கட், முனுசாமி, எம்.சி.ரோடு நிர்வாகிகள் கே.செல்வானந்தம், கே.பலராமன், காசிம், பெரிய மார்க்கெட் நிர்வாகிகள் பொ.பூபதி, தே.கணேசன், வள்ளலார் சங்க நிர்வாகிகள் தமீம் சேட்டு ஆகியோர் வழங்கினர்.