புதுச்சேரி, ஆக. 8- ரேசன் கடைகள் மூலம் தரமான அரிசி போடப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதங்களுக்குப் பிறகு, முதல்வர் ரங்கசாமி பதிலளித்தார். அப்போது, தனிநபர் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்களுக்கான நலத்திட்டங்கள் எந்த நிலையிலும் குறைக்க முடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் மூலதன செல வினங்களை அதிகரிக்க வேண்டும் என்றார். புதுச்சேரி மாநிலம் சிறந்த வளர்ச்சி பெற மாநில அந்தஸ்து அவசியம். அதை பெற வேண்டும் என்பது அவருடைய எண்ணம் இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. ஆட்சி நிர்வாகத்தில் விரைவான செயல்பாடு, வளர்ச்சி இருக்க வேண்டும். கோப்புகளை விரைவாக வர வேண்டும், முடிக்கப்பட வேண்டும் என்றால் மாநில அந்தஸ்து மிக அவசியம். இது தொடர்பாக ஒன்றிய அரசை தொடர்ந்து புதுச்சேரி அரசு வலியுறுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள நிறு வனங்களின் ஊழியர்கள் ஊதி யங்களை தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சில சலுகைகளை தனியார் நிறுவனங்கள் எதிர்பார்கிறார்கள். அதை அரசு பரிசீலிக்கிறது. தகவல் தொழில்நுட்ப்பூங்கா வர வேண்டும் என்பது அரசின் எண்ணம். ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களுக்கு துறை அமைச்சர் சென்று நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து பேசி வருகிறார். தகவல் தொழில்நுட்ப பூங்கா விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். மாணவர்களுக்கு ரூ.1000..! சென்டாக் மூலம் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு நிலுவை உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அரசு பள்ளியில் படித்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை இந்த ஆண்டு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்க வலியுறுத்தியுள்ளோம். இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்து வோம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். ரேசன் கடை கடைகளில் புதுச்சேரி அரசின் கூட்டுறவு நுகர்வோர் இணையம் (கான் பெட்) மூலம் அனைத்து ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும். ரேசன் கடை ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கப்படும். கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒரு சில மாதங்களில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி பதிலளித்தார்.