ராணிப்பேட்டை, அக். 14 – ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த பெல் குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வரும், பெல் டி.ஏ.வி. சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு திங்களன்று (அக். 14) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள நிலையில், தகவல் அறிந்த போலீசார் நேரில் சென்று பள்ளி மாண வர்களை பாதுகாப்பாக வெளியேற்றி ஆய்வு மேற்கொண்டனர். இந்த பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தொடர் விடுமுறையை முடித்து திங்களன்று (அக். 14) காலை பள்ளி வழக்கம் போல் திறக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரி யர் வீரமுருகன், வழக்கம் போல தனது பணியை மேற்கொண்ட போது, இ-மெயில் மூலம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு நேரில் வந்த சிப்காட் போலீசார் பள்ளி மாணவர்களை பாது காப்பாக வெளியேற்றினர். மேலும் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதா என கண்டறிய வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்தனர். பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.