districts

சென்னை முக்கிய செய்திகள்

ராயபுரத்தில் 31 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் உறுதி

சென்னை, நவ. 24- சென்னை ராயபுரத்தில் கடந்த செவ்வா யன்று 31 பேரை வெறிநாய் ஒன்று கடத்தி குதறியுள்ளது. அதனைத்தொடர்ந்து அந்த நாயை மக்கள் அடித்து கொன்றுள்ளனர். இதனிடையே அந்த நாயின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதற்கான முடிவுகள் 2 நாட்களில் வரும் என தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் உயி ருடன் உள்ள நாயின் எச்சிலில் இருந்து ரேபிஸ் வைரஸ் இருக்கிறதா என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம். அதுவே உயிரிழந்த நாயிடம் ரேபிஸ் வைரஸ் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வது கடினம் என கால்நடை மருத்துவர்கள் கூறியதால் 2 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. ரேபிஸ் தொற்று உறுதி இந்நிலையில் அந்த நாயிடம் ரேபிஸ் உள்ளதா என்பது தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியானது. இதில் 31 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாய் கடித்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்நிலையில் அவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி 5 தவணைகளாக வழங்கப்பட இருக்கிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட நாய்கள் மாநக ராட்சி சார்பில் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிக்கப்பட்ட நாய்கள் அனைத்தும் தடுப்பூசி போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், நாய் கடித்து 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் அனைத்தும் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மாநகராட்சி ஊழியர்கள் சார்பில் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். மாடுகள் முட்டி பலர் படுகாயம் சமீபத்தில் மாடுகள் முட்டி பலர் காயமடைந்து வந்தனர். இந்நிலையில் நாய்கள் கடித்து பலர் காயமடைந்துள்ளனர். சென்னையில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்களுக்கான இலவச பாலியல் பரிசோதனை முகாம்

சென்னை, நவ. 24- சென்னையின் மிகப்பெரிய சிறுநீரக சிகிச்சை மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கும் ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி மருத்துவமனை (ஏஐஎன்யூ), பாலியல் நல்வாழ்வுக்கான இலவச பாலியல் ஆரோக்கிய பரிசோதனை முகாமை நவ. 26ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் அருகில் உள்ள  தனது மருத்துவமனை வளாகத்தில் (ஜிஜி மருத்துவமனை அருகில்)  நடத்த உள்ளது. இந்த பரிசோதனை முகாம் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. பரிசோதனை முகாமிற்கு வரும் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பரிசோதனையுடன் எண்டோதீலியல் ஸ்கேன் மற்றும் ஆண்ட்ரோலஜி ஆலோசனையும் இம்மருத்துவமனையின் சிறுநீரகம் மற்றும் ஆண்ட்ரோலஜி நுண் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் சஞ்சய் பிரகாஷ் தலைமையில் விரிவாக வழங்கப்பட உள்ளது. 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த பரிசோதனைகள் அனைத்தும் இந்த முகாமிற்கு வருபவர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஓசூர்-தளி சாலையில் ரயில்வே மேம்பாலம்: செல்வகுமார் எம்பி ஆய்வு

கிருஷ்ணகிரி,நவ.24- கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஓசூர்-தளி சாலை, உள்வட்ட சாலை, ரயில் பாதை ஆகிய மூன்றும் சந்திக்கும் இப்பகுதி யில் தினமும் 20 முறைக்கு மேல் ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, தளி சாலையில் மேம்பாலம், ரயில்வே பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், தொழி லாளர்கள், வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.  கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது ஆட்சி அமைந்ததும் உடனடியாக மேம்பாலம் கட்டப்படும் என்றும் பாஜக பொய் வாக்குறுதிகள் கூறியது. ஆனால் 10 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போதுதான் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு முன் தயாரிப்பு ஆய்வு நடத்தப்பட்டது. ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் அமைப்பதாக கூறி வந்த நிலையில், ரயில்வே துறையும் மேம்பாலம் கட்ட உத்தேசித்து வருவதால் இரு துறைகளையும் சேர்ந்து பொறி யாளர்களுடன் இணைந்து கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி உறுப்பினர் செல்வகுமார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து நிதி ஒதுக்கி பணிகளை துவக்கும் என்றும் அவர் கூறினார்.

ஓசூர் எம்ஜிஆர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கிருஷ்ணகிரி,நவ.24- ஓசூர் எம்ஜிஆர் கலை அறிவியல் கல்லூரியில் 32 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது முதல்வர் முத்துமணி வரவேற்றார்.அதியமான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் குழு தலைவர் மருத்துவர் பானுமதி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி துவக்கி வைத்தார். 1064 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.கல்லூரி முதல்வர் முத்துமணி உறுதிமொழி வாசித்தார்.

என்எல்சி தலைவரின் சொந்த நலனுக்காக கோடிக்கணக்கில் செலவு: சிபிஎம் கண்டனம்

கடலூர், நவ.24- தனது சொந்த நலனுக்காக என்எல்சி நிறுவன பணத்தை  கோடிக்கணக்கில் செல வழித்த தலைவருக்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. என்எல்சி நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன குமார்  சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல லட்சம் செலவு செய்து நவம்பர்  19 அன்று காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை யாகம் நடத்தியிருக்கிறார். இதில் சிதம்பரத்தை சேர்ந்த 121 தீட்சிதர்கள் மற்றும் என்எல்சி உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். என்எல்சி நிறுவனத்தில் தன்னுடைய பதவிக்கு எவ்வித ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக ‘மகா ருத்ரா அபிஷேகம்’ நடத்தப்பட்டதாக பத்திரிகை மற்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. என்எல்சி தலைவரது இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்திருக்கிறது. இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- என்எல்சி நிறுவனத்தின் பணம் சுமார் ரூ. 50 லட்சம் சிதம்பரம் கோவிலுக்கு செலவு செய்யப்பட்டதாக வந்துள்ள செய்தி அனை வரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இன்னும் இதுபோல்  திரு வண்ணாமலை, காஞ்சிபுரம், திருவானைக்காவல், காளஹஸ்தி ஆகிய  நான்கு கோயில்களில் யாகம் நடத்தி, மேலும் சில கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்த செய்திகள் பல கேள்வி களை எழுப்பி உள்ளது.  தன்னுடைய சொந்த நலனுக்காக யாகம் அபி ஷேகம் செய்வதற்கு பொதுத்துறை நிறு வனத்தின் பணத்தை எடுத்து செலவு செய்ய என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக வாரியம் அனு மதி அளித்துள்ளதா? மதச்சார்பின்மை கொள் கையை கடைபிடிக்கும் இந்தியாவில் ஒரு மதம் சார்ந்த பூஜைக்கு லட்சக்கணக்கான ரூபாய் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி எப்படி செலவு செய்துள்ளது.

இந்த என்எல்சி நிறு வனம் உருவாக காரணமாக இருந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களின் கோரிக்கைகள் கிடப்பில் உள்ளது. நிலம் கொடுத்த விவ சாயிகளுக்கு உரிய இழப்பீடு, விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம், புறம்போக்கில் வசிப்போர்க்கு மாற்று இடம்,  அவுட் சோர்சிங் திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த ஜூன் 6 அன்று கம்மாபுரத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பால கிருஷ்ணன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர்  கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் செப்.1 அன்று சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி. நாகை மாலி, எம். சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். செப். 4 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவ சாய  தொழிலாளர் சங்கம் இணைந்து சேத்தியாத் தோப்பு கடலூர் விருத்தாசலம் ஆகிய இடங்களில் மறியல் போராட்டத்தை நடத்தினர். இந்த சூழ்நிலையில் கடலூர் மாவட்ட மக்க ளுக்கு செலவிடாமல் இப்படி வீணடிக்கும் நட வடிக்கையை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.