districts

img

நலத்துறை விடுதி பிப்.19ல் திறக்க அதிகாரி உறுதி

புதுச்சேரி,பிப்.16- இந்திய மாணவர் சங்கத்தின் போராட்ட அறி விப்பை தொடர்ந்து, புதுச் சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவர் விடுதி பிப்.19 அன்று திறக்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சாரம் அருகே கொசப்பாளையத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத் துறைக்கு சொந்தமான  மாணவர் நல  விடுதி உள்ளது. இந்த விடுதியின் பராமரிப்பு பணிகள் மாத கணக்கில் நடைபெற்று வந்தது, இதனால் மாணவர்கள் விடுதியில் தங்க முடியாமல் அவதிப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த இந்திய மாணவர் சங்கத் தின் மாநில நிர்வாகிகள் வீட்டுக்கு சென்றனர். பிறகு, துறையின் இயக்குநரை சந்தித்தனர். அப்போது, விடுதியின் பரா மரிப்பு பணிகளை விரை வாக முடிக்க வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்த னர். இயக்குநர் ஆய்வு இந்திய மாணவர் சங்கத்தின் புகாரைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் இயக்குநர் இளங்கோவன், நேரடியாக விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் இந்திய மாண வர் சங்க நிர்வாகிகள் மற்றும் விடுதி மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அனைத்து பணிகளையும் பிப்.18க்குள் போர்க்கால அடிப்படையில் முடித்து பிப்.19 முதல் மாணவர்கள் நிரந்தரமாக தங்கலாம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து, மாணவர் சங்கத்தின் போராட்டம் திரும்பப் பெறு வதாக  சங்கத்தின் புதுச்சேரி மாநிலச் செய லாளர் பிரவீன்குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.