districts

img

புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

புதுச்சேரி, ஜன.15- புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்திற் குள் புகுந்து காதலனை தாக்கி  துரத்தி விட்டு , 3 பேர் கொண்ட கும்பல் வடமாநில மாண வியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா  பல்கலைக்கழகத்தில் மாண விக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொ டுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. இந்நிலையில், அதே போன்ற தொரு சம்பவம் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. புதுச்சேரி மாநிலம்  காலாப்பட்டில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இங்கு இள நிலை, முதுநிலை படிப்புகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2  ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு வட மாநிலத்தை சேர்ந்த மாணவி  ஒருவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து முதலாமாண்டு இள நிலை பொறியியல் படிப்பு படித்து வரு கிறார். இந்த மாணவி இதே கல்லூரி யில் படிக்கக்கூடிய மாணவர் ஒருவரை  காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விடுமுறை என்ப தால், இருவரும் கல்லூரி வளாகத்தில் வேதியியல் பிரிவு கட்டிடத்தின் பின்புறம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த 3 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஜோடியிடம் சென்று இங்கு என்ன செய்கிறீர்கள்? எதற்காக வந்தீர்கள் எனக்கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட மாணவரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி யுள்ளது. பின்னர் அங்கிருந்த மாண வியை 3 பேரும் சேர்ந்து பாலியல் வன் கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பியோட முயன்ற மாணவியை மீண்டும் துரத்தி  பிடித்ததோடு, மாணவியை சரமாரியாக  தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால்  சுதாரித்துக் கொண்ட மாணவி உடனே  கத்தி கூச்சலிடவே, பயந்து போன  கும்பல் அவரை விட்டு விட்டு அங்கி ருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளது. இதில் உடல் முழுவதும் படுகாய மடைந்த மாணவி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை  பெற்று பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பி உள்ளார். பாதிக்கப்பட்டவர் வடமாநில மாணவி என்பதால் காவல்துறைக்கு செல்ல பயந்து, பல்கலைக்கழக நிர்வா கத்திடம் நடந்த சம்பவங்கள் குறித்து  புகார் அளித்துள்ளார். இந்த விவ காரம் வெளியே வந்தால் பல்கலைக் கழகத்துக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் இச்சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை  செய்ய முயற்சித்தவர்களில் 2 பேர்  புதுச்சேரி அருகே உள்ள காலாப்பட்டு பகுதியையும், ஒருவர் வில்லியனூர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என  தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக விசா ரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மேலும் இதுபோன்ற சம்பவம் நடக்கா மல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

விசாரணைக்கு எஸ்எப்ஐ வலியுறுத்தல்

தொழில்நுட்ப பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்கள் அனைவரையும் கண்டறிந்து கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய மாணவர்  சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ஜெய பிரகாஷ்,செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்  காங்கிரஸ் மற்றும் பாஜகவின் தவ றான கொள்கையால் மாநிலத்தில் போதை கலாச்சாரம் என்பது தலை விரித்தாடுகிறது. கடந்த ஆண்டும், இதேபோன்று  முத்தியாள்பேட்டையை சேர்ந்த சிறுமி ஒருவர்  போதை ஆசாமியால் இரையான நிலையில், அதைக் கண்டித்து மாநிலம் முழுவதும்  தன்னெ ழுச்சியாக போராட்டங்கள்  நடை பெற்றன. மாநில என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அரசு கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுப்பதற்கு அக்கறை காட்டவில்லை. பல கல்வி வளாகங்கள் இரவு நேரங்களில் போதை ஆசாமிகளின் புகலிடமாக மாறி வருகிறது. புதுச்சேரி  அரசு இதை உடனடியாக காவல்துறை யின் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும். கல்வி வளாக விடுதிகளில் மாணவி களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.  மேலும் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக விவகாரத்தில், நிர்வா கம் பாதிக்கப்பட்ட மாணவியை புகார்  கொடுக்க விடாமல் மிரட்டியிருப்ப தாகவும் தெரிய வருகிறது. இருப்பி னும், பல்கலைக்கழக நிர்வாகம் மூடி  மறைக்காமல் காவல்துறை மூலம்  உரிய விசாரணை நடத்தி குற்றச்செய லில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.